இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

கோப்புகளின் மேல் ஏறி அமர்ந்திருந்தவர்கள் வடிக்கும் முதலைக் கண்ணீர்: காங்கிரசைத் தாக்கிய பிரதமர் மோடி 

தங்களது ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்காக எதுவுமே செய்யாமல் கோப்புகளின் மேல் ஏறி அமர்ந்திருந்தவர்கள், இன்று  முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள் என்று காங்கிரஸை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:14 pm

DIN

லக்னௌ:  தங்களது ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்காக எதுவுமே செய்யாமல் கோப்புகளின் மேல் ஏறி அமர்ந்திருந்தவர்கள், இன்று  முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள் என்று காங்கிரஸை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். 

உத்தரப்பிரதேசம் மாநிலம் மிர்ஸாபூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து  பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

விவசாயிகளின் பெயரால் இன்று அரசியல் நடத்துபவர்களுக்கு தங்களது ஆட்சிக்காலத்தில் விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க நேரமில்லாமல் போனது. ஆனால், எங்கள் ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் குறைந்தபட்ச ஆதரவு விலையை இரண்டரை மடங்கு உயர்த்தியுள்ளோம். 

அதேபோல அவர்களது ஆட்சிக் காலத்தில் நாடு முழுவதும் பல்வேறு பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் முடக்கி வைக்கப்பட்டது ஏன் என்பதை மக்கள் அவர்களை நோக்கி கேட்க வேண்டும்.

சமீபத்தில் வெளியான ஒரு சர்வதேச ஆய்வு தொடர்பான புள்ளி விபரத்தில் இந்தியாவில் கடந்த இரண்டு  ஆண்டுகளில் சுமார் ஐந்து கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதே ஆய்வின் முடிவு மட்டும் எங்கள் அரசுக்கு எதிராக வந்திருந்தால் ஊடகங்கள் இந்நேரம் எங்கள் ஆட்சியை  கடுமையாகத் விமர்சித்திருக்கும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் பல்வேறு மக்கள் திட்டங்களை விரைவு செய்து பணிகளை முடித்துள்ளோம். அதன் பலனை நாட்டு மக்கள் அனைவரும் இன்று பார்க்கலாம்.

3500 கோடி ரூபாய் மதிப்பிட்டில் இன்று தொடங்கப்பட்ட பன்சாகர் பாசன திட்டத்தின் மூலம் மிர்ஸாபூரில் உள்ள ஒன்றரை லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பயனடையும்.

தங்களது ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்காக எதுவுமே செய்யாமல் கோப்புகளின் மேல் ஏறி அமர்ந்திருந்தவர்கள், இன்று  முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.