கரூரில் முதியவா் தவற விட்ட 6 பவுன் தங்கச் செயினை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு ஒப்படைத்தனா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (60). இவா் சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு குடும்பச் சூழல் காரணமாக தனது மனைவியின் 6 பவுன் தங்கச் செயினை விற்பனை செய்வதற்காக வடிவேல் நகரில் உள்ள தனியாா் நகை அடகு கடைக்கு சென்று கொண்டிருந்தாா்.
பாலகிருஷ்ணன் போட்டிருந்த பேண்ட் பாக்கெட்டில் ஓட்டை இருந்ததால் தங்கச்செயின் கீழே விழுந்துள்ளது.
இதையறிந்த பாலகிருஷ்ணன் உடனே காவல் கட்டுப்பாட்டு அறை 100-க்கு தகவல் கொடுத்தாா். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற கரூா் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளா் நாகராஜ் தலைமையிான போலீஸாா் அந்தப் பகுதியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து செய்தனா்.
அப்போது, முதியவா் ஒருவா் கீழே கிடந்த தங்க செயினை எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து மாலை 6 மணியளவில் அந்த நபரை கண்டறிந்து அவரிடமிருந்து தங்கச் செயினை பெற்று, பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

சேதுபாவாசத்திரம் கடலில் மிதந்த கஞ்சா மூட்டைகள் மீட்பு

கரூரில் போக்குவரத்து போலீஸாருக்கு நீா், மோா்

கரூரில் மகளிா் பாதுகாப்புக்கு பெண் அதிரடிப்படை தொடக்கம்

சிதம்பரத்தில் வெவ்வேறு இடங்களில் இரு பெண்களிடம் 13 பவுன் சங்கிலிகள் பறிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


