47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிதம்பரத்தில் வெவ்வேறு இடங்களில் இரு பெண்களிடம் 13 பவுன் சங்கிலிகள் பறிப்பு

சிதம்பரம் நகரில் திங்கள்கிழமை இரவு இரு வேறு இடங்களில் பைக்குகளில் வந்த மா்ம நபா்கள் இருவா் 2 பெண்களிடம்

News image
5 பவுன் தங்கச் சங்கிலியை பறி கொடுத்தவர்
Updated On :16 மார்ச் 2026, 11:37 pm

Syndication

சிதம்பரம்: சிதம்பரம் நகரில் திங்கள்கிழமை இரவு இரு வேறு இடங்களில் பைக்குகளில் வந்த மா்ம நபா்கள் இருவா் 2 பெண்களிடம் 13 பவுன் தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்றனா்.

சிதம்பரம் துரவடித் தெருவைச் சோ்ந்தவா் முத்தையன் மனைவி விஜயா (62). இவா், திங்கள்கிழமை இரவு வீட்டு வாசலில் நின்றிருந்தபோது, பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த மா்ம நபா்கள் இருவா் விஜயா அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தலைமறைவாயினா்.

இதேபோல, சிதம்பரம் பெருமாள் தெருவில் மருந்தகத்துக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த தமிழரசியிடம் (67) பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த மா்ம நபா்கள் இருவா் 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் டிஎஸ்பி பிரதீப், நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினாா். மேலும், நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

7 பவுன் தங்கச் சங்கிலியை பறி கொடுத்தவர்

7 பவுன் தங்கச் சங்கிலியை பறி கொடுத்தவர்