ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

கும்பல் கொலை: ராஜஸ்தான் அரசிடம் அறிக்கை கேட்கிறது மத்திய அரசு

ராஜஸ்தான் மாநிலம், அல்வர் மாவட்டத்தில் பசுக்களை கடத்திச் சென்றதாகக் கூறி இளைஞரை 5 பேர் கும்பல் அடித்துக் கொலை செய்தது தொடர்பாக அந்த மாநில அரசிடம் மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது.

Updated On :24 ஜூலை 2018, 1:15 am IST

ராஜஸ்தான் மாநிலம், அல்வர் மாவட்டத்தில் பசுக்களை கடத்திச் சென்றதாகக் கூறி இளைஞரை 5 பேர் கும்பல் அடித்துக் கொலை செய்தது தொடர்பாக அந்த மாநில அரசிடம் மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது.
அல்வர் விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், ராஜஸ்தான் மாநில அரசு கூடிய விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அக்பர் கான் (28) என்பவர் 2 மாடுகளை வாங்கிக் கொண்டு ஹரியாணாவில் உள்ள தனது சொந்த கிராமத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு அல்வர் மாவட்டம் வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, பசுக்களை கடத்திச் சென்றதாக சந்தேகித்து, அவரை ஒரு கும்பல் இடைமறித்து தாக்கியது. தாக்குதலில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.
உயரதிகாரக் குழு விசாரணை: இதனிடையே, அல்வர் சம்பவத்தில் அக்பர் கானை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் தாமதம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக விசாரிக்க ராஜஸ்தான் காவல்துறை, 4 அதிகாரிகளைக் கொண்ட உயரதிகாரக் குழு ஒன்றை அமைத்துள்ளது. மேலும், அல்வர் கும்பல் கொலை தொடர்பான வழக்கு விசாரணை அல்வர் மாவட்ட காவல்துறையிடம் இருந்து, ஜெய்ப்பூர் சரக காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளரிடம் வழங்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.