இந்நிலையில் புதனன்று மதியம் ஒரு மணி அளவில் மூன்று குழந்தைகளும் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ந்த அக்கம் பக்கத்தார் குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில் மூவருமே இறந்து போனது தெரியவந்தது. பிரேத பரிசோதனை செய்ததில், அந்த குழந்தைகளுக்கு எந்த நோயும் இல்லை, உடலில் காயங்களும் இல்லை, என்பது தெரிய வந்தது. ஆனால் அவர்கள் முவரும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தண்ணீர், உணவு என எதையும் சாப்பிடவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது.