மானிய சிலிண்டர் விலை ரூ.2.34ம், மானியமில்லா சிலிண்டர் விலை ரூ.48ம் உயர்வு

10 மாநிலங்களில் உள்ள 9 சட்டப்பேரவை மற்றும் 4 மக்களவைக்கான இடைத்தேர்தல்கள் முடிந்து நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன.
மானிய சிலிண்டர் விலை ரூ.2.34ம், மானியமில்லா சிலிண்டர் விலை ரூ.48ம் உயர்வு
Updated on
1 min read


புது தில்லி: 10 மாநிலங்களில் உள்ள 9 சட்டப்பேரவை மற்றும் 4 மக்களவைக்கான இடைத்தேர்தல்கள் முடிந்து நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன.

பொதுவாக தேர்தல்கள் முடிந்ததும் ஏதாவது ஒன்றின் விலையை உயர்த்துவதுதானே ஜனநாயக நடைமுறை.

அந்த வகையில், தற்போது மானியமில்லா எரிவாயு சிலிண்டர்களின் விலையில் ரூ.48ம், மானிய சிலிண்டர்களின் விலையில் ரூ.2.34ம் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதனால், மானிய சிலிண்டர்கள் விலை தில்லியில் ரூ.493.55ம், மானியமில்லா சிலிண்டர் விலை ரூ.698.50 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதே போல, மானிய சிலிண்டர் விலை கொல்கட்டாவில் ரூ.496.65 ஆகவும், மும்பையில் ரூ.491.31 ஆகவும், சென்னையில் ரூ.481.84 ஆகவும் உயர்ந்துள்ளது.

மானியமில்லா சிலிண்டர் விலை கொல்கட்டாவில் ரூ.723.50 ஆகவும், மும்பையில் ரூ.671.50 ஆகவும், சென்னையில் ரூ.712.50 ஆகவும் உயர்ந்துள்ளது.

ஏற்கனவே, பெட்ரோல், டீசல் விலைகள் தினந்தோறும் உயர்ந்து வருவதால், பொருளாதார சிக்கலில் சிக்கித் தவித்து வரும் சாமானிய மக்களுக்கு, சிலிண்டர் எரிவாயு உருளை விலையும் உயர்த்தப்பட்டிருப்பது மிகப்பெரிய இன்னலை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com