யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பத்திரிகையாளர்களுக்கு சுகாதார காப்பீட்டுத் திட்டம்: ஒடிஷா அரசு அறிமுகம் 

பணியில் இருக்கும் பத்திரிகையாளர்களுக்கு சுகாதார காப்பீட்டுத் திட்டத்தினை ஒடிஷா அரசு அறிமுகம் செய்துள்ளது.

News image
Updated On :1 ஜூன் 2018, 11:30 am

PTI

புபனேஸ்வர்: பணியில் இருக்கும் பத்திரிகையாளர்களுக்கு சுகாதார காப்பீட்டுத் திட்டத்தினை ஒடிஷா அரசு அறிமுகம் செய்துள்ளது.

ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் மாநில தலைமைச் செயலகத்தில் வெள்ளியன்று 'கோபபந்து சம்பதிகா ஸ்வஸ்தியா பிமா யோஜனா' என்று பெயரிடப்பட்ட இந்த திட்டத்தை அறிமுகம் செய்தார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்த திட்டத்தின் முதல் கட்டமாக பணியில் இருக்கும் 3233 பத்திரிகையாளர்களுக்கு, ஆண்டுக்கு ரூ 2 லட்சம் வரையிலான சுகாதாரக் காப்பீடு வழங்கப்படும். குறிப்பிட்ட பத்திரிகையாளரின் குடும்பத்திலிருந்து குறைந்தபட்சமாக ஐந்து பேர் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள்.

பத்திரிக்கையாளர்கள் தங்களுக்கான சுகாதாரக் காப்பீட்டு அட்டையினை மாவட்ட செய்தி மற்றும் தகவல் தொடர்பு அலுவலரிடம் இருந்து பெறலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து புபனேஸ்வர் சார்ந்த பத்திரிகையாளர்கள் மாநில தலைமைச் செயலகத்தில் முதல்வர் நவீன் பட்நாயக்கைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அத்துடன் பணியில் இருக்கும் பொழுது பத்திரிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் அவரிடம் எடுத்துரைத்தனர். அத்துடன் பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குமாறு முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.