சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

கழிவறையிலும் காவி: சர்ச்சையில் சிக்கிய உத்தரப் பிரதேச முதல்வர் பங்கேற்ற விழா 

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்ற விழா ஒன்றில், அரங்கத்தின் கழிவறையிலும் காவி  டைல்ஸ்கள் ஒட்டப்பட்ட விவகாரம் தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:12 pm

ANI

லக்னௌ: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்ற விழா ஒன்றில், அரங்கத்தின் கழிவறையிலும் காவி  டைல்ஸ்கள் ஒட்டப்பட்ட விவகாரம் தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச முதல்வராக பாஜகவின் யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றதிலிருந்து அம்மாநிலத்தில் எங்கும் காவி, எதிலும் காவி என்னும் போக்கே மேலோங்கி காணப்படுகிறது. குறிப்பாக அரசு அலுவலங்கள், புதிய கட்டிடங்கள் என அனைத்திற்கும் காவி நிறத்தை பூசி வந்த பாஜக வினர், கடந்த மாதம் அம்பேத்கர் சிலை ஒன்றுக்கு கூட காவி நிறத்தை பூசிய விவகாரம் பெரும் சர்சையைக் கிளப்பியது. பின்னர் சிலைக்கு மீண்டும் நீல நிறமே பூசப்பட்டது. பொதுவாக உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் காவி நிறம் மேலோங்கி காணப்படுவது என்பது இயல்பான ஒன்றாகும் .

இந்நிலையில் யோகி ஆதித்யநாத் பங்கேற்ற விழா ஒன்றில், அரங்கத்தின் கழிவறையிலும் காவி  டைல்ஸ்கள் ஒட்டப்பட்ட விவகாரம் தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அங்குள்ள புகழ்பெற்ற 'ரஷ்கான்' அரங்கத்தில்  நடைபெற்றது. இந்த விழாவுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை தாங்கினார். அவரது வருகையினை ஒட்டி விழா மேடை, தோரணங்கள், திரைச்சீலை என எல்லாமே காவி நிறமாக காட்சியளித்தது.

அதன் உச்சகட்டமாக அரங்கில் உள்ள கழிவறை சுவர்களில் ஏற்கனவே இருந்த வெள்ளை டைல்ஸ் ஓடுகள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக காவி நிற டைல்ஸ் ஓடுகள் பதிக்கப்பட்டன. இவ்வாறு முதலவர் பங்கேற்கும் விழா அரங்கின் கழிவறை சுவர்களில் கூட காவி நிற ஓடுகள் பதிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை மாநிலத்தில் உண்டாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.