மிஸோரமில் சாலை விபத்து: 11 பேர் பலி
மிஸோரமில் மாநிலம், லுங்லி மாவட்டத்தில் உள்ள பங்ஸால் என்ற கிராமம் அருகே பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில், பயணிகள் 11 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர்.


மிஸோரமில் மாநிலம், லுங்லி மாவட்டத்தில் உள்ள பங்ஸால் என்ற கிராமம் அருகே பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில், பயணிகள் 11 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: தனியார் பேருந்து ஒன்று அய்ஸ்வால் நகரில் இருந்து சியாஹா மாவட்டத்துக்கு சென்றுகொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலி: இதனிடையே, மிஸோரமில் மாநிலம், லுங்லி நகரில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: லுங்லான் பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. அப்போது, அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், ஒரு கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.
லுங்லி மாவட்ட பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...