ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பயனாளர்களின் தகவல்கள் பகிர்வு? பேஸ்புக்குக்கு மத்திய அரசு நோட்டீஸ்

பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை பகிர்ந்ததாக வெளிவந்த செய்தியை அடுத்து மத்திய அரசு பேஸ்புக்குக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

News image
Updated On :8 ஜூன் 2018, 8:25 am IST

பேஸ்புக் நிறுவனம் ஆப்பிள், சாம்சங் போன்ற அலைபேசி நிறுவனங்களுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி தனது பயனாளர்களின் தகவல்களை குறிப்பிட்ட அலைபேசி நிறுவனங்களுடன் பகிர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனால், பேஸ்புக் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

பேஸ்புக் நிறுவனம் பயனாளர்களின் தகவல்களுக்கு உத்தரவாதம் அளித்து தான் தொடங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த செய்தி வந்திருப்பது சர்ச்சையே ஏற்படுத்தியுள்ளது. அதனால், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க பேஸ்புக் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

அதன்படி வரும் 20-ஆம் தேதிக்குள் பேஸ்புக் நிறுவனம் இந்த விவகாரம் குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும். பேஸ்புக் நிறுவனமும் இதுகுறித்து விளக்கம் அளிப்பதாக தெரிவித்துள்ளது. 

முன்னதாக, கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்திடம் பேஸ்புக் பயனாளர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் குறித்தான தகவல்களை தேர்தலுக்காக பேஸ்புக் நிறுவனம் பகிர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.