

மும்பை: நாளை முதல் ஜூன் 12ம் தேதி வரை மகாராஷ்டிராவில் மும்பையின் உட்பட கடற்கரைப் பகுதிகளில் கன மழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தென் மேற்குப் பருவ மழை மத்திய அரபிக்கடல் மற்றும் மகாராஷ்ராவில் தீவிரமாகும் என்றும், கர்நாடகாவின் கடற்கரைப் பகுதிகளி, கோவா, மகாரர்ஷ்டிராவின் பல பகுதிகளில் ஜூன் 10ம் தேதி வரை மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக் கட்டத்தில் சில குறிப்பிட்ட இடங்களில் மிகக் கன மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாகக் கூறியுள்ளது.
ஜூன் 12ம் தேதிக்குப் பிறகு இப்பகுதிகளில் மழை அளவு படிப்படியாகக் குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.