ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

குமாரசாமி அரசுக்கு எதிராக மனு: அவசர வழக்காக கருத உச்ச நீதிமன்றம் மறுப்பு 

கா்நாடகத்தில் தனிப் பெரும்பான்மை பெறாமல் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்த மதச்சாா்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி அரசுக்கு எதிா்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுவை... 

News image
Updated On :8 ஜூன் 2018, 2:40 pm

DIN

புதுதில்லி: கா்நாடகத்தில் தனிப் பெரும்பான்மை பெறாமல் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்த மதச்சாா்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி அரசுக்கு எதிா்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

பாதுகாப்பு காரணம் கருதி பெயா் குறிப்பிடாமல் வழக்குரைஞா் ஒருவா் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கா்நாடகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், முதல்வரானது வேறொருவா். மக்கள் அவரை (முதல்வா் குமாரசாமி) முதல்வராக தோ்ந்தெடுக்கவில்லை. ஏன் கா்நாடக மக்கள் வேதனைப்பட வேண்டும்? எனவே, எனது மனுவை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிபதிகள் ஆதா்ஷ் குமாா் கோயல், அசோக் பூஷண் ஆகியோா் அடங்கிய விடுமுறை கால அமா்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது.

அதை விசாரித்த நீதிபதிகள், ‘மன்னிக்கவும். இந்த மனுவை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க இயலாது’ என்று தெரிவித்தனா்.

கா்நாடகத்தில் 222 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு சட்டப் பேரவைத் தோ்தல் கடந்த மாதம் 12-ஆம் தேதி நடைபெற்றது. பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும் வெற்றி பெற்றது. மதச்சாா்பற்ற ஜனதா தளம் 37 இடங்களைக் கைப்பற்றியது.

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை 3 பிரதான கட்சிகளுக்கும் கிடைக்காத காரணத்தால் தொங்கு சட்டப் பேரவை அமைந்தது. இதையடுத்து, தங்களால் பெரும்பான்மையை நிரூபித்து காட்ட முடியும் என்று கூறி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநா் வஜுபாய் வாலாவிடம் பாஜகவின் எடியூரப்பா கடிதம் அளித்தாா். முதல்வராகப் பதவியேற்ற எடியூரப்பாவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. அதைத் தொடா்ந்து, தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

பின்னா், மதஜ-காங்கிரஸ் கூட்டணியை ஆட்சி அமைக்க ஆளுநா் அழைப்பு விடுத்தாா். தற்போது குமாரசாமி தலைமையிலான ஆட்சி அங்கு நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.