கஜகஸ்தான் அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு

கஜகஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நசர்பயேவை சர்வதேச சூரிய மின்சக்தி நாடுகள் கூட்டமைப்பில் இணைய பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
கஜகஸ்தான் அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு
Published on
Updated on
1 min read

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, மாநாட்டில் பங்கேற்ற மற்ற நாட்டு தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் அவர், உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷாவ்கத் மிர்ஸியோயேவ், தஜிகிஸ்தான் அதிபர் எமோமலி ரஹ்மோன், கஜகஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நசர்பயேவை ஆகியோரை சந்தித்து பேசினார்.

இதில், கஜகஸ்தான் அதிபரை சர்வதேச சூரிய மின்சக்தி நாடுகள் கூட்டமைப்பில் இணைவதற்கு மோடி அழைப்பு விடுத்தார். 

சர்வதேச சூரிய மின்சக்தி நாடுகள் கூட்டமைப்பில் என்பது 2015-ஆம் ஆண்டு எரிபொருள் பயன்படுத்துதலை குறைப்பதற்காக தொடங்கப்பட்ட கூட்டமைப்பாகும். 

மோடியின் இந்த அழைப்புக்கு கஜகஸ்தான் அதிபர் நேர்மறையான பதில் தந்ததாக வெளியுறவுத் துறை செயலாளர் (மேற்கு) ருச்சி ஞானஷ்யாம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com