தென்மேற்குப் பருவ மழை தீவிரம்: தெலங்கானாவை புரட்டிப் போட்டது

தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்ததன் காரணமாக தெலங்கானாவின் நிர்மல், நிஸாமாபாத் மற்றும் மஹபூப்நகர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
தென்மேற்குப் பருவ மழை தீவிரம்: தெலங்கானாவை புரட்டிப் போட்டது
Updated on
1 min read


ஹைதராபாத்: தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்ததன் காரணமாக தெலங்கானாவின் நிர்மல், நிஸாமாபாத் மற்றும் மஹபூப்நகர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

தெலங்கானாவின் ஸ்ரீகாகுளம், விஸியநகரம், விசாகப்பட்டினம், கிழக்குக் கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரி என ஆந்திர மாநிலத்தின் வடக்கு கடற்கரைப் பகுதிகளில் திங்கட்கிழமை முதல் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது தவிர, தெலங்கானா மற்றும் ஆந்திராவின் கடற்கரைப் பகுதிகளில் லேசானது முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ராயலசீமாவில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com