ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

நாடு முழுவதும் பேராசிரியர்கள் பணி உயர்வுக்கு புதிய முறை: மத்திய அரசு

நாடு முழுவதும் பேராசிரியர்கள் பணி உயர்வுக்கு என புதிய முறையினை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.  

News image
Updated On :13 ஜூன் 2018, 1:01 pm

DIN

புதுதில்லி: நாடு முழுவதும் பேராசிரியர்கள் பணி உயர்வுக்கு என புதிய முறையினை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.  

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள் பணி உயர்வு பெறுவதற்கு என்று புதிய முறை ஒன்றை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிமுகம் செய்துள்ளது. அதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள் பணி உயர்வு பெறுவதற்காக, இதுவரை அவர்கள் வகுப்புகள் எடுக்கும் முறை, பணி மூப்பு மற்றும் ஆராய்ச்சி நூல்கள் வெளியீடு ஆகியவற்றை பொறுத்து பணி உயர்வு அளிக்கும் முறை கையாளப்பட்டு வந்தது.

இனி அதற்குப் பதிலாக புதிதாக தேர்வு முறை ஒன்றினை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிமுகம் செய்துள்ளது. இதன் காரணமாக நடைமுறையில் இருக்கும் முறையானது முற்றிலுமாக கைவிடப்பட உள்ளது. இந்தப் புதிய முறை வரும் 2022-ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.