இன்று ஆடிப் பெருக்கு: ஆறுகள் வறண்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம்இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
/

தில்லியில் அபாயகரமான அளவுக்கு அதிகரித்த காற்று மாசு: மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை 

தில்லியில் அபாயகரமான அளவுக்கு காற்று மாசு அதிகரித்த காரணத்தால், பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:26 pm IST

புதுதில்லி: தில்லியில் அபாயகரமான அளவுக்கு காற்று மாசு அதிகரித்த காரணத்தால், பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் தலைநகர் தில்லியில் அவ்வப்போது புழுதிப்புயல் வீசுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். புழுதிப்புயல் காரணமாக வியாழன் அன்றும் அங்கு காற்றில் மாசு அதிகமாக இருந்தது. மேலும் தொடர்ந்து 3 அல்லது 4 நாட்களுக்கு புழுதிப்புயல் வீசும் என முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் திறந்த வெளி பகுதியில் அதிக நேரம் இருப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் வியாழன் அன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து, காற்றில் அதிக அளவில் மாசு கலப்பதை தடுக்க தில்லியில் கட்டிடங்களின் கட்டுமான பணிகளை வருகிற 17-ந் தேதி வரை நிறுத்தி வைக்குமாறு அவர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் ராஜஸ்தானில் இருந்து வீசி வரும் புழுதிப் புயல் காற்றால் தில்லி முழுவதும் பரவலாக காற்று மாசு அதிகரித்துள்ளது. இதன்காரணமாக மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.