கிரிக்கெட் போட்டியின் போது இரு அணிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 22 வயது இளைஞர் ஞாயிற்றுக்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.
பெங்களூருவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மஹாலஷ்மி லேஅவுட்டின் குருபரஹள்ளி எனுமிடத்தில் ஜே.சி.நகர் 5-ஆவது தெருவில் அமைந்துள்ள மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியைச் சேர்ந்த இரு குழுவினர் கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட மோதலில் 22 வயது இளைஞர் கிரிக்கெட் மட்டையால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மஹாலஷ்மி லேஅவுட் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
இதில், கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் மஹாலஷ்மி லேஅவுட் பகுதியிலுள்ள ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த மணிகண்டா என்ற 22 வயது இளைஞன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் மீது இதே காவல்நிலையத்தில் நிறைய கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட தகராறில் மணிகண்டா, எதிரணி வீரர்களை தாக்கியுள்ளான். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக எதிரணி வீரர்கள் மாலை 6:30 மணியளவில் அவனை கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
இதுதொடர்பாக கிரிக்கெட் விளையாடிய இரு குழுக்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மருத்துவா் ச.ராமதாஸ் உடல்நலக் குறைவு: தருமபுரி பரப்புரை ரத்து

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும்! - டிடிவி. தினகரன்

குடும்ப ஆட்சி நடத்தும் திமுகவை அகற்ற மக்கள் விருப்பம்! - பாஜக தேசிய தலைவா் நிதின் நபின்

எட்டயபுரம் அருகே விபத்து சென்னையைச் சோ்ந்த நால்வா் உயிரிழப்பு; இருவா் காயம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


