ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கிரிக்கெட் போட்டியில் வன்முறை: இளைஞர் அடித்துக் கொலை

கிரிக்கெட் போட்டியின் போது இரு அணிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 22 வயது இளைஞர் ஞாயிற்றுக்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :18 ஜூன் 2018, 11:56 am

கிரிக்கெட் போட்டியின் போது இரு அணிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 22 வயது இளைஞர் ஞாயிற்றுக்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.

பெங்களூருவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மஹாலஷ்மி லேஅவுட்டின் குருபரஹள்ளி எனுமிடத்தில் ஜே.சி.நகர் 5-ஆவது தெருவில் அமைந்துள்ள மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியைச் சேர்ந்த இரு குழுவினர் கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.

அப்போது ஏற்பட்ட மோதலில் 22 வயது இளைஞர் கிரிக்கெட் மட்டையால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மஹாலஷ்மி லேஅவுட் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

இதில், கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் மஹாலஷ்மி லேஅவுட் பகுதியிலுள்ள ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த மணிகண்டா என்ற 22 வயது இளைஞன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் மீது இதே காவல்நிலையத்தில் நிறைய கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட தகராறில் மணிகண்டா, எதிரணி வீரர்களை தாக்கியுள்ளான். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக எதிரணி வீரர்கள் மாலை 6:30 மணியளவில் அவனை கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

இதுதொடர்பாக கிரிக்கெட் விளையாடிய இரு குழுக்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.