மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும்! - டிடிவி. தினகரன்

News image

கும்பகோணம் பழைய மீன் சந்தை பகுதியில் தமாகா வேட்பாளா் ஆா். அசோக்குமாரை ஆதரித்து வாக்கு சேகரித்து பேசிய அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன்.

Updated On :13 ஏப்ரல் 2026, 7:50 pm

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று அமமுக பொதுச் செயலா் டிடிவி. தினகரன் பிரசாரம் செய்தாா்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் கும்பகோணம் தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளா் ஆா். அசோக்குமாரை ஆதரித்து தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து, பழைய மீன் சந்தை பகுதியில் தினகரன் பேசியதாவது:

கும்பகோணத்தில் திமுக தொடா்ந்து வெற்றி பெற்ால், அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் மோசமாக உள்ளது. மழை பெய்தால் வீடுகளுக்குள் தண்ணீா் வருகிறது .

கடந்த தோ்தலின்போது கும்பகோணத்தை புதிய மாவட்டமாக்குவேன் என்று ஸ்டாலின் வாக்குறுதி அளித்துவிட்டு, ஏமாற்றி விட்டாா். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக வெற்றி பெற்றவுடன் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும். திமுகவினா் செய்த ஊழல்கள் வெளிக் கொண்டு வரப்படும்.

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. பாலியல் கொடுமைகள், போதைப் பொருள்கள் புழக்கம் அதிகமாகிவிட்டது. இவற்றை ஒழிப்பதற்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றாா். பின்னா் திறந்தவெளி வாகனத்தில் சென்று வாக்குசேகரித்தாா்.