வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

சிறுமி முதல் மூதாட்டி வரை வல்லுறவு! தவெக அரசின் கையாலாகத்தனம்! டிடிவி தினகரன்

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யை டிடிவி தினகரனம் கடுமையாக விமர்சித்திருப்பது பற்றி...

News image

டிடிவி தினகரன் - கோப்புப் படம்

Updated On :29 மே 2026, 10:01 am IST

பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் தவெக ஆட்சி நிர்வாகத்தின் கையாலாகத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து தொடர் பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாகவும், இன்னும் சிங்கப்பெண் அதிரடிப் படை திட்டத்தை தொடங்கி வைக்காமல் இருப்பதற்கும் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசை டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் டிடிவி தினகரன் தெரிவித்திருப்பதாவது:

”வயது, பாலினம், மனிதாபிமானம் என எதையுமே பொருட்படுத்தாமல் 10 வயது சிறுமியில் தொடங்கி மூதாட்டிகள் வரை அரங்கேறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள், சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் தவெக ஆட்சி நிர்வாகத்தின் கையாலாகத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட மூன்று திட்டங்களில் முதன்மைத் திட்டமான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை தொடங்கி வைக்கவே முடியாத ஜோசப் விஜய், பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார்?

புதிய டிஜிபி நியமனத்திற்கு பின்பு தான் இந்த நிகழ்வு நடக்கும் என்று சொல்லப்படும் தகவல் உண்மையென்றால், தமிழகத்தில் குதிரை பேர அரசு எதற்கு?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பெண் அதிரடிப்படையின் தொடக்க விழா, சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் மே 27-ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், முதல்வரின் தில்லி பயணம் காரணமாக ரத்து ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி இன்று காலை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Summary

AMMK General Secretary TTV Dhinakaran condemns TVK Govt and CM Joseph Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.