நீட் தோ்வுக்கு குறுகிய கால பயிற்சி இன்று தொடக்கம்3 புதிய மெட்ரோ வழித்தடங்கள்: டிசம்பரில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர டிஎம்ஆா்சி திட்டம்உக்ரைன் - ரஷியா போரில் 49 இந்தியா்கள் உயிரிழப்பு : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்எபோலா: கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்சரக்குகள் கையாளுதல்: சென்னை, காமராஜா் துறைமுகங்கள் சாதனை
/

சூலூர் சிறுமி கொலை: பெண்கள் பாதுகாப்பில் தனிகவனம் தேவை: முதல்வருக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

கோவையில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து டிடிவி தினகரன் தெரிவித்தது தொடர்பாக...

News image

டிடிவி தினகரன் - கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 9:21 am IST

கோவை அருகே சூலூர் சிறுமி கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பெண்களின் பாதுகாப்பு விவகாரத்தில் தனி கவனம் செலுத்தவேண்டும் என்று சனிக்கிழமை டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை சூலூா் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமி கடத்தப்பட்ட நிலையில், அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது:

கோவை மாவட்டம் சூலூர் அருகே 9 வயது சிறுமி கொடூரமான முறையில் படுகொலை: மனிதநேயமற்ற மிருகங்கள் மீது சமரசமற்ற முறையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயம்புத்தூர் மாவட்டம்  சூலூர் பகுதியில் தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த  9 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த சிலரால் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்து குளக்கரையில் வீசப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னையாக மட்டுமல்லாமல் சமூகத்தின் அடிப்படை மனிதநேயத்தையே கேள்விக்குறியாக்கும் அவலநிலையை ஏற்படுத்தியுள்ளன. எனவே,கொடூரமான முறையில்  சிறுமியைக் கொலை செய்த மனிதநேயமற்ற மிருகங்களைக் கைது செய்து அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில்  தனி கவனம் செலுத்தவேண்டும் என முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

In a post regarding the brutal murder of a young girl in Coimbatore, TTV Dhinakaran emphasized on Saturday (May 23) that special attention must be paid to the safety of women.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.