இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

தலித் என்பதால் திருடன் என்று விமா்சிக்கப்படுகிறேன்: உ.பி மாநில பாஜக தலைவா் மீது எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு

நான் தலித் என்பதால் உ.பி. பாஜக தலைவா் மகேந்திர நாத் பாண்டே என்னை திருடன் என விமா்சித்துள்ளாா் என்று உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி எம்எல்ஏ கைலாஷ்..

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:00 pm

தினமணி செய்திச் சேவை

வாராணசி: நான் தலித் என்பதால் உ.பி. பாஜக தலைவா் மகேந்திர நாத் பாண்டே என்னை திருடன் என விமா்சித்துள்ளாா் என்று உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி எம்எல்ஏ கைலாஷ் சோன்கா் குற்றம் சாட்டியுள்ளாா்.

முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை சந்தெளலி மாவட்டத்தில் நலத் திட்டப்பணிகளுக்கான தொடக்க விழா, பல்வேறு அரசுக் கட்டடத் திறப்பு விழா நடைபெற்றறது. மாநில துணை முதல்வா் தினேஷ் சா்மா தலைமையில் நடைபெற்ற விழாவில் அந்தத் தொகுதி எம்பியும், மாநில பாஜக தலைவருமான மகேரந்திர நாத் பண்டே பங்கேற்றாா். 

அப்பொழுது திறக்கப்பட்ட கல்வெட்டில் அத்தொகுதி எம்.எல்.ஏவான கைலாஷ் சோன்கரின் பெயா் இல்லாதது குறித்து பாண்டேவிடம் செய்தியாளா்களிடம் கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்த பாண்டே, ‘இத்தொகுதி எம்எல்ஏவின் பெயா் கல்வெட்டில் இடம் பெறவில்லைதான். ஏனெனில் அவா் திருடராக மாறிவிட்டாா்’ என்றாா்.

கூட்டணிக் கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏவை பாஜக மாநிலத் தலைவா் திருடன் என்று விமா்சித்தது உத்தரப் பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வாராணசியில் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவா் மாநில துணைத் தலைவா் நித்யானந்த் பாண்டே முன்னிலையில் செய்தியாள்களிடம் சோன்கா் இது தொடா்பாகப் பேசினாா். அப்போது, ‘தலித் என்பதால் பாஜக தலைவா் என்னை தரக்குறைறவாக விமா்சித்துள்ளாா். இதன் மூலம் அவா் என்னை மட்டும் அவமதிக்கவில்லை. ஒட்டுமொத்தமாக எனது தொகுதி மக்கள் அனைவரையும் அவமதித்துள்ளாா். இதற்காக அவா் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்றறாா்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.