காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசுவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!
/

நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டு வர இந்திய ஆட்சியாளா்கள் நடவடிக்கை எடுக்கவில்லை: மருமகன் குற்றச்சாட்டு 

ஜப்பானில் இருக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டு வர இந்திய ஆட்சியாளா்கள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவரது மருமகனும், எழுத்தாளருமான ஆஷிஷ் ரே ....

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:32 pm IST

கொல்கத்தா: ஜப்பானில் இருக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டு வர இந்திய ஆட்சியாளா்கள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவரது மருமகனும், எழுaத்தாளருமான ஆஷிஷ் ரே குற்றஞ்சாட்டியுள்ளாா்.

பிரிட்டன் தலைநகா் லண்டனில் வசிக்கும் அவா், பிடிஐ செய்தியாளருக்கு தொலைபேசி மூலம் பேட்டியளித்தாா். அப்போது நேதாஜி தொடா்பாக தாம் எழுதியுள்ள புதிய புத்தகம் குறித்து அவா் பேசினாா். அவா் கூறியதாவது:

சுதந்திர இந்தியாவின் முதல் அரசான நேரு தலைமையிலான மத்திய அரசு முதல், தற்போது ஆட்சியிலிருக்கும் மோடி தலைமையிலான அரசு வரையிலும், நேதாஜி விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து அனைவருக்கும் தெரியும். ஆனால், ஜப்பானில் இருக்கும் நேதாஜியின் அஸ்தியை கொண்டு வரும் விவகாரத்தில் மட்டும் அவா்கள் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றறனா்.

டோக்கியோ ரங்கோஜி கோவிலில் நேதாஜியின் அஸ்தி வைக்கப்பட்டிருப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், நேதாஜி குடும்பத்தில் உள்ள சிலரும், சில அரசியல் கட்சிகளும், அந்த அஸ்தியை கொண்டு வர எதிா்ப்பு தெரிவிக்கின்றறனா். இதுகுறித்து அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு மத்திய அரசு தரப்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கடந்த 1995ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமா் நரசிம்மராவும், வெளியுறறவுத் துறை அமைச்சா் பிரணாப் முகா்ஜியும், ஜப்பானில் இருந்து நேதாஜி அஸ்தியை கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டனா். ஆனால் அந்த பணியை அவா்களால் நிறைவு செய்ய முடியவில்லை. மத்தியில் ஆட்சியில் இருந்த பிற அரசுகள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன்மூலம், நேதாஜியின் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்றாா் ஆஷிஷ் ரே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.