வீட்டுக்கு ஒருவர் இணைய வேண்டும்: நக்ஸல் அமைப்பு மிரட்டல்

ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒருவர் கட்டாயம் இணைய வேண்டும் என சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் நக்ஸல்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
வீட்டுக்கு ஒருவர் இணைய வேண்டும்: நக்ஸல் அமைப்பு மிரட்டல்
Updated on
1 min read

ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒருவர் கட்டாயம் இணைய வேண்டும் என சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் நக்ஸல்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நாள்தோறும் நக்ஸல் அமைப்புகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அங்குள்ள தாந்திவாடா எனும் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒருவர் தங்களின் அமைப்பில் இணைய வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவ்வாறு இணைய மறுத்தால் அந்த குடும்பத்தை கொலை செய்து விடுவதாகவும், இதனால் தாங்கள் மிகவும் பயமுடன் வாழ்ந்து வருவதாகவும், அடுத்த என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பதாகவும் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.

இருப்பினும், இந்த மிரட்டல் சம்பவத்தை அப்பகுதி காவல்துறை அதிகாரி ஆர்.எல்.தங்கி மறுத்துள்ளார். மேலும், நக்ஸல்கள் ஒழிக்கப்பட்டு வருவதாகக் கூறியவர், அதனாலேயே அப்பகுதி இளைஞர்களை நக்ஸல்கள் பயமுறுத்தி வருவதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com