தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

மத்திய அரசு ஊழியர்களுக்கு இனி மிகை ஊதியம் இல்லை

மத்திய அரசு பணியாளர்கள் கூடுதல் நேரம் பணியாற்றும்போது வழங்கப்படும் மிகை ஊதியத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம்

Updated On :27 ஜூன் 2018, 1:30 am IST

மத்திய அரசு பணியாளர்கள் கூடுதல் நேரம் பணியாற்றும்போது வழங்கப்படும் மிகை ஊதியத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே சமயம், தொழிற்சாலை ஊழியர்களுக்கு வழங்கப்படும் மிகை ஊதியம் ரத்து செய்யப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்து வழங்கி வருவதால், மிகை ஊதியத்தை ரத்து செய்யலாம் என்ற 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மத்திய செலவினங்கள் துறை விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசின் கீழ் வரும் அனைத்து அமைச்சகம், துறைகள் மற்றும் சார்பு அலுவலகங்களிலும் இந்த ஊதிய ரத்து நடவடிக்கையை செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், தொழிற்சாலை பணியாளர்கள் என வரையறைக்குள் வரும் பணியாளர்களை பட்டியலிடுமாறு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அரசுத் துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொழிற்சாலை ஊழியர்களுக்கு வழங்கப்படும் மிகை ஊதிய முறையை பயோமெட்ரிக் வருகைப்பதிவுடன் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், மிகை ஊதியத்தின் அளவை, மூத்த அதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையில் நிர்ணயிக்கும் முந்தைய முடிவில் எவ்வித மாற்றமும் செய்வதில்லை என அரசு முடிவெடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.