காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகிறார் மோடி!: மாயாவதி விமர்சனம்

கவிஞர் கபீர் தாஸின் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் வாக்கு வங்கி அரசியலில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருவது தெளிவாகத் தெரியவந்துள்ளது என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி

News image
Updated On :29 ஜூன் 2018, 1:09 am IST

கவிஞர் கபீர் தாஸின் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் வாக்கு வங்கி அரசியலில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருவது தெளிவாகத் தெரியவந்துள்ளது என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியதாவது:
15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கபீர் தாஸின் 500-ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் பங்கேற்கிறார் என்பதற்காக பல கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது. பிரம்மாண்ட வரவேற்பும், விளம்பரங்களும் அளிக்கப்பட்டன.
கபீர் தாஸின் பெயரில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் ஆராய்ச்சி நிறுவனம் அமைப்பதற்காக பிரதமர் அடிக்கல் நாட்டினார். ஆனால், அந்தத் திட்டத்தின் மதிப்பைக் காட்டிலும் அதிக தொகை பிரதமரின் வருகைக்காக செலவிடப்பட்டதுதான் முரண்பட்ட நடவடிக்கை.
இவை எல்லாம் மக்களை ஏமாற்றும் செயல்பாடுகள் என்பது அனைவருக்கும் தெரியும். கபீர் தாஸைப் பொருத்தவரை அவர் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்துள்ளார். அவரது பெயரைப் பயன்படுத்தி வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் நடவடிக்கைகளில் பிரதமர் இறங்கியிருக்கிறார். எதிர்வரும் மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அவர் இவ்வாறு செயல்பட்டு வருகிறார் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.