

கேரளாவின் கோட்டையம் பகுதியில் அமைந்துள்ள மலங்கரா தலைமை திருச்சபையில் பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணிடம் 5 பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், திருச்சபைகளின் செயலர் பிஜூ ஓமன் என்பவரிடம் அளித்த புகாரின் பேரில் அந்த 5 பாதிரியார்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. மேலும் கேரள காவல்துறையிலும் இதுதொடர்பாக அவர் புகார் அளித்தார்.
மேலும் இவ்விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கேரள காவல்துறை டிஜிபி-யிடம் தேசிய மகளிர் ஆணையம் புகார் மனு அளித்துள்ளது.
இந்நிலையில், பாலியல் புகாரை திரும்பப் பெறுமாறு மலங்கரா சிரியன் திருச்சபை அதிகாரிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக அந்தப் பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.