ஜயேந்திரர் மறைவுக்கு எடியூரப்பா இரங்கல்

ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் மறைவுக்கு கர்நாடக பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜயேந்திரர் மறைவுக்கு எடியூரப்பா இரங்கல்
Updated on
1 min read

ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் மறைவுக்கு கர்நாடக பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இரங்கல் செய்தியில்,  காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மறைந்த செய்தியை கேட்டு தீவிர துக்கமடைந்தேன்.  சனாதன மதத்தின் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.  

ஜயேந்திர சுவாமிகளின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  அவரது பக்தர்களின் ஒருவனாக,  சுவாமிகள் பாதங்களுக்கு எனது நமஸ்காரத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தென் இந்தியாவில் பிரசித்தி பெற்ற காமகோடி மடத்தின் சங்கராச்சார்யா பீடத்தின் மடாதிபதியாக திகழ்ந்த அவர்,  பல்வேறு சமூக நலப் பணிகள் செய்ததுடன்,  பக்தர்களுக்கு வழிகாட்டியாக விளங்கினார்.  

அவரது மறைவால் வாடும் பக்தர்கள் அனைவருக்கும் கடவுள் இதனைத் தாங்கும் சக்தியைக் கொடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com