எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காஷ்மீரில் பனிச்சரிவு: இளைஞர் பலி

ஜம்மு-காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், இருவர் படுகாயமடைந்தனர். இந்த மீட்புப் பணிகளின்போது, கடந்த மாதம் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த

News image
Updated On :1 மார்ச் 2018, 7:38 pm

DIN

ஜம்மு-காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், இருவர் படுகாயமடைந்தனர். இந்த மீட்புப் பணிகளின்போது, கடந்த மாதம் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த மூவரின் உடல்கள் மீட்கப்பட்டன.
பந்திபோரா மாவட்டத்தின் ஹசாங்கம்-மலங்கம் பகுதியில் புதன்கிழமை திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 4 பேர் சிக்கினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினரும் போலீஸாரும் அப்பகுதிக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதில் அப்துல் அஜீஸ் என்பவரது உடல் மீட்கப்பட்டது. மேலும் இருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
காணாமல்போன மற்றொருவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது. அப்போது, மேலும் 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இவர்கள் கடந்த மாதம் 24-ஆம் தேதி இப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர்களது உடல்கள் விசாரணைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.