நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஆளுநர் மீது ஹெட்போனை எறிந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்: தெலங்கானா சபாநாயகர் அதிரடி! 

சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் மீது ஹெட்போனை எறிந்த இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து தெலங்கானா சபா நாயகர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News image
Updated On :13 மார்ச் 2018, 2:07 pm IST

ஹைதராபாத்: சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் மீது ஹெட்போனை எறிந்த இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து தெலங்கானா சபா நாயகர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தெலங்கானா சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் திங்களன்று துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் நரசிம்மன் அங்கு உரையாற்ற வந்திருந்தார். அவர் தனது உரையினைத் துவங்கியதும், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்று கூச்சல் போட்டு அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்தனர்.

அதன் உச்சகட்டமாக காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏக்கள் கோமாத்ரி வெங்கட் ரெட்டி மற்றும் சம்பத்குமார் ஆகிய இருவரும் கையில் உள்ள பொருள்களை ஆளுநரை நோக்கி வீசினார்கள். அதிலும் வெங்கட் ரெட்டி தனது ஹெட்போனை ஆளுநரை நோக்கி வீசினார். அது பேரவைச் செயலர் ஸ்வாமி கவுட்டின் மீது பட்டு அவருக்கு கண்ணில் காயம் உண்டானது. 

இதன் தொடர்ச்சியாக ஆளுநர் நரசிம்மன் மீது ஹெட்போனை எறிந்த கோமாத்ரி வெங்கட் ரெட்டி மற்றும் சம்பத்குமார் ஆகிய இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை மொத்தமாக தகுதி நீக்கம் செய்து தெலங்கானா சபா நாயகர் மதுசூதன சாரி செவ்வாயன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதன் காரணமாக அவரகள் தற்போதைய சட்டப்பேரவையின் எஞ்சிய ஆயள்காலமான அடுத்த ஆண்டு மே மாதம் வரை, கூட்டங்களில் பங்கேற்க முடியாது. 2014-ஆம் ஆண்டு தனி மாநிலமாக தெலங்கானா உருவாக்கப்பட்ட பிறகு இப்படி நடப்பது இதுவே முதல்முறையாகும்.  

அத்துடன் காங்கிரஸ் அவைத் தலைவர் ஜன ரெட்டி உள்ளிட்ட 11 காங்கிரஸ் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தற்போதைய பட்ஜெட் கூட்டத் தொடரிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சபாநாயகரின் இந்த முடிவுக்கு ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேநேரம் இந்த விவகாரம் தொடர்பாக பிற கட்சிகளுடன் சபாநாயகர் கலந்து ஆலோசித்து இருக்கலாம் என்று பாஜக தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.