ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

உ.பி., பிகார் இடைத்தேர்தல் முடிவுகள்: படுதோல்வியைச் சந்தித்த பாஜக

உத்தரப்பிரதேசம் மற்றும் பிகாரில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் ஆளும் பாஜக படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

News image
Updated On :14 மார்ச் 2018, 2:15 pm

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் தொகுதி பாஜக எம்.பி.யாக இருந்த யோகி ஆதித்யநாத், அம்மாநில முதல்வராக கடந்த ஆண்டு தேர்வானதைத் தொடர்ந்து, எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார். இதேபோல், துணை முதல்வராக தேர்வான கேசவ் பிரசாத் மௌர்யா, பூல்பூர் தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார்.

இதையடுத்து இவ்விரு தொகுதிகளுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை புதன்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கியது. இதில், இரு மக்களவை தொகுதிகளிலும் சமாஜவாதி கட்சி, முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் இருந்தே தொடர்ந்து முன்னிலை பெற்று, வெற்றிபெற்று இரு தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. 

உத்தரப்பிரதேசத்தில் பூல்பூர் தொகுதியில் சமாஜவாதி கட்சியின் நாகேந்திர பிரதாப்சிங் படேல் 59,613 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் கௌஷலேந்திர சிங் படேலை வீழ்த்தினார். அதுபோல கோரக்பூர் தொகுதியில் சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த பிரவீண் குமார் நிஷாத் 21,881 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் உபேந்திர தத் சுக்லாவை வீழ்த்தினார்.

அதுபோல பிகாரில் நடைபெற்ற 3 இடங்களுக்கான இடைத்தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 2 இடங்களிலும், பாஜக 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளது.

பிகாரின் ஆராரியா மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர் 61,988 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தினார். ஜெஹனாபாத் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளரை 35,036 வாக்குகள் வித்தியாசத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் வீழ்த்தினார். பாபூவா பேரவைத் தொகுதியில் மட்டும் பாஜகவின் ரிங்கி ராணி பாண்டே 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஷாம்பூ சிங் படேலை தோற்கடித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.