ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதி கோவில் உண்டியல் பணம் எண்ண செல்லலாம்: தாளித்த சிதம்பரம்! 

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எல்லாம் திருப்பதி கோவில் உண்டியல் பணம் என்னும் பணிக்குச் செல்லலாம் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:30 pm

DIN

புதுதில்லி: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எல்லாம் திருப்பதி கோவில் உண்டியல் பணம் என்னும் பணிக்குச் செல்லலாம் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் 84- ஆவது வருடாந்திர மாநாடு தில்லியில் உள்ள இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசும் பொழுது கூறியதாவது:

வறுமைக் கோட்டுக்கு கீழ் இருந்த 14 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டது மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசின் மிகப்பெரிய சாதனை. 

ஆனால் தற்பொழுது வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.இப்படி மக்களை மீண்டும் வறுமையில் தள்ளியது அவர்களுக்கு பாஜக அரசு செய்த பெரும் அநீதி.

பணமதிப்பு நீக்கதிற்குப் பிறகு வங்கிகளில் இருந்து வந்து சேர்ந்த பழைய ருபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை குறித்து ரிசர்வ் வங்கி தரப்பிலிருந்து சரியான தகவல் இல்லை. எப்பொழுது கேட்டாலும் எண்ணிக் கொண்டு இருப்பதாக சொல்கிறார்கள்.

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஏன் திருப்பதி கோவிலில் உண்டியலில் பணம் எண்ண செல்லக்கூடாது? அவர்களை விட திருப்பதி கோயில் ஊழியர்கள் வேகமாகப் பணம் எண்ணுகிறார்கள்.

இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.