புது தில்லி: சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரத்தில் சந்தேகப்படும் டியூஷன் பயிற்சியாளரிடம் தில்லி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிளஸ்2 பொருளாதாரம் மற்றும் 10ம் வகுப்பு கணிதத் தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியான விவகாரம் தொடர்பாக இருவேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில், முக்கியக் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் டியூஷன் பயிற்சியாளர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் கணக்கு மற்றும் பொருளாதாரப் பாடங்களுக்கு வகுப்பெடுத்து வருகிறார்.
விசாரணை முதற்கட்டத்தில் இருப்பதால், இந்த விவகாரத்தில் சிபிஎஸ்இ அதிகாரிகள் யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து கூற இயலாது. இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. டியூஷன் பயிற்சியாளர்களுக்கு முன்கூட்டியே வினாத்தாள் வந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்று விசாரணை அதிகாரி கூறியுள்ளார்.
வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக தில்லியில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகளும் நடைபெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தலில் மீண்டும் 2ஜி சுனாமி!

தமிழகத்தில் 3 மாதங்களில் 100 உடல் உறுப்பு தானங்கள்: மருத்துவ வரலாற்றில் முதல்முறை
ஆட்சி மாற்றம் கண்டிப்பாக இருக்கும்! - தவெக பொருளாளா் பி. வெங்கடரமணன் சிறப்பு நோ்காணல்

திருவண்ணாமலை சண்முகா கல்லூரியில் ஆண்டு விழா
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


