தபாலில் வந்த +2 பொருளாதார விடைத்தாள்: அதிர்ந்து போன சிபிஎஸ்இ

நாடு முழுவதும் +2 பொருளாதார தேர்வு நடைபெற்ற அன்றைய தினம், தில்லி சிபிஎஸ்இ அலுவலகத்துக்கு கைகளால் எழுதப்பட்ட விடைத்தாள் தபாலில் வந்தத் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தபாலில் வந்த +2 பொருளாதார விடைத்தாள்: அதிர்ந்து போன சிபிஎஸ்இ
Updated on
1 min read


புது தில்லி: நாடு முழுவதும் +2 பொருளாதார தேர்வு நடைபெற்ற அன்றைய தினம், தில்லி சிபிஎஸ்இ அலுவலகத்துக்கு கைகளால் எழுதப்பட்ட விடைத்தாள் தபாலில் வந்தத் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிளஸ் 2 பொருளாதாரம் மற்றும் பத்தாம் வகுப்பு கணக்குப் பாடத் தேர்வுக்கான வினாத்தாள்கள், முன்கூட்டியே வெளியானதாகப் புகார்கள் எழுந்த நிலையில், மறு தேர்வு நடத்த சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், வினாத்தாள் கசிந்தது தொடர்பாக தில்லி காவல்நிலையத்தில் சிபிஎஸ்இ அளித்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, ராஜிந்தர் நகரில் இயங்கும் பயிற்சி மையத்தை நடத்தும் நபருக்கு, வினாத்தாள்கள் கசிந்ததில் முக்கியப் பங்கு இருப்பதாக, மார்ச் 23ம் தேதி அலுவலகத்துக்கு பெயர் குறிப்பிடாமல் அனுப்பப்பட்ட பேக்ஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த பேக்ஸில் ராஜிந்தர் நகர் பகுதியில் இயங்கும் இரண்டு பள்ளிகளுக்கும் வினாத்தாள் கசிந்ததில் தொடர்பிருப்பதாகவும் கூறப்பட்டிருந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், மார்ச் 26ம் தேதி +2 பொருளாதார தேர்வு நடைபெற்ற அன்றைய தினம் ரௌசி அவன்யூவில் சிபிஎஸ்இ மையத்துக்கு, அனுப்புநர் முகவரி இல்லாமல் வந்த பதிவுத் தபாலில், கையால் எழுதப்பட்ட பொருளாதார விடைத்தாள் இணைக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில், பொருளாதார வினாத்தாள் வெளியே கசியவிடப்பட்டதும், வாட்ஸ் அப் மூலம் பரவியதும் உறுதி செய்யப்பட்டது என்று சிபிஎஸ்இ அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com