ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.59 கோடி அபராதம் விதித்த ஆர்பிஐ: ஏன் தெரியுமா? 

தங்கள் கைவசமுள்ள முதிர்வு பத்திரங்கள் தொடர்பான தகவலை மறைத்த காரணத்தினால் ஐசிஐசிஐ வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.59 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.59 கோடி அபராதம் விதித்த ஆர்பிஐ: ஏன் தெரியுமா? 
Updated on
1 min read

மும்பை: தங்கள் கைவசமுள்ள முதிர்வு பத்திரங்கள் தொடர்பான தகவலை மறைத்த காரணத்தினால் ஐசிஐசிஐ வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.59 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

நாட்டிலுள்ள வங்கிகள் அனைத்தும் தங்களுக்கு நிதி முதலீடு திரட்டும் பொருட்டு பல்வேறு வகையான திட்டங்களின் கீழ் பத்திரங்களை வெளியிடுவது வழக்கம். அவ்வாறு 'முதிர்வடையும் வரை வைத்திருத்தல்' என்னும் ஹெச்.டி.எம் என்னும் முறையிலும் பத்திரங்கள் வெளியிடப்படும்.     

இத்தகைய பத்திரங்களை மேலாண்மை செய்வதற்கு என்று மத்திய வங்கியான ஆர்பிஐ பல்வேறு விதிமுறைகளை வகுத்திருக்கிறது. ஆனால் ஐசிஐசிஐ வங்கி அவ்வாறு தங்கள் கைவசம் உள்ள பத்திரங்கள் தொடர்பாக சரியான தகவல்களை தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தங்கள் கைவசமுள்ள முதிர்வு பத்திரங்கள் தொடர்பான தகவலை மறைத்த காரணத்தினால் ஐசிஐசிஐ வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.59 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஆர்.பி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் எவ்வாறு ஐசிஐசிஐ வங்கி இந்த தவறைச் செய்தது தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com