அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

பெண் குழந்தைகளின் பெற்றோர்களே பாலியல் வன்புணர்வு சம்பவங்களுக்குப் பொறுப்பு: அதிர வைத்த பாஜக எம்எல்ஏ 

பெண் குழந்தைகளின் பெற்றோர்களே பாலியல் வன்புணர்வு சம்பவங்களுக்குப் பொறுப்பு என்று உத்தரபிரதேச மாநில பாஜக எம்எல்ஏ ஒருவர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:54 pm

கவியழகன்

கான்பூர்: பெண் குழந்தைகளின் பெற்றோர்களே பாலியல் வன்புணர்வு சம்பவங்களுக்குப் பொறுப்பு என்று உத்தரபிரதேச மாநில பாஜக எம்எல்ஏ ஒருவர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பைரியா தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் சுரேந்தர் சிங். பாலியா மாவட்டத்தில், திங்களன்று நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கு பெற்ற அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நாட்டில் பெண் குழநதைகளுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிகரித்துவிட்டதற்குப் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள்தான் பொறுப்பு. அவர்கள் பெண் குழந்தைகளை சுதந்திரமாக நடமாடவிடுவதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் நடக்கின்றன.

அக்குழநதைகளின் பெற்றோர்கள் தங்களின் பெண் குழந்தைகளை முறையாகப் பார்த்துக்கொள்ளாமல், கண்காணிக்காமல் விட்டுவிடுவதால்தான் இதுபோன்று நடக்கின்றன. ஒரு சிறுமிக்கோ அல்லது சிறுவனுக்கோ 15 வயது வந்துவிட்டால், அவர்களின் நடவடிக்கைகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இது பெற்றோரின் கட்டாயக் கடமையாகும்.

ஆனால், அப்படிச் செய்யாமல், அவர்களைச் சுதந்திரமாக விட்டுவிடுகிறார்கள். இப்படிச் செய்வதால்தான் பலாத்கார சம்பவங்கள் நடக்கின்றன. அத்துடன் குழந்தைகள் செல்போன்களைப் அனுமதிக்க தரக்கூடாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

முன்னதாக இவர்தான் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சூர்ப்பனகை என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.