2017-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வு மதிப்பெண்கள் வெளியீடு: தெலங்கானாவைச் சேர்ந்த அனுதீப் துரிஷெட்டி முதலிடம்!

2017-ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வின் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 55.60 சதவீத மதிப்பெண்களுடன் தெலங்கானாவைச்
Updated on
1 min read

புதுதில்லி: 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வின் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 55.60 சதவீத மதிப்பெண்களுடன் தெலங்கானாவைச் சேர்ந்த  அனுதீப் துரிஷெட்டி முதலிடத்தில் பிடித்துள்ளார்.

ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான தேர்வு (2017) முடிவுகள் கடந்த மாதம் 27-ஆம் தேதி வெளியிடப்பட்டன.  இந்த தேர்வில் 750 ஆண்கள், 240 பெண்கள் என 990 பேர் வெற்றி பெற்றனர். அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

இதில், 55.60 சதவீத மதிபெண்களுடன் தெலங்கானாவைச் சேர்ந்த அனுதீப்  துரிஷெட்டி முதலிடத்தில் பிடித்துள்ளார். 

மொத்தம் 2,025 மதிப்பெண்களுக்காக நடத்தப்பட்ட தேர்வில் அனுதீப் எழுத்துத் தேர்வில் 950 மதிபெண்களும், நேர்முகத் தேர்வில் 176 மதிப்பெண்கள் என மொத்தம் 1126 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். 

இதனை தொடர்ந்து அரியானா மாநிலத்தை சேர்ந்த 4 வயது குழந்தையின் தாய் அனு குமாரி எழுத்துத் தேர்வில் 937 மதிப்பெண்களும், நேர்முகத் தேர்வில் 187 மதிப்பெண்கள் பெற்று மொத்தம் 1124 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

மூன்றாவது இடம் பிடித்துள்ள சச்சின் குப்தா எழுத்துத் தேர்வில் 946 மதிப்பெண்களும், நேர்முகத் தேர்வில் 176 மதிப்பெண்கள் என மொத்தம் 1122 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 

2016- ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற நந்தினி கே.ஆர். 1,120 மதிப்பெண்கள் (55.3 சதவீதம்) பெற்றார். 2015-ஆம் ஆண்டு தினா டபி 1,063 மதிப்பெண்கள் (52.49 சதவீதம்) பெற்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com