

கர்நாடக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதிக தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தாலும், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்குமா என்பதில் இன்னமும் இழபறி நீடிக்கிறது.
இந்த நிலையில், சிவ சேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பாஜக பெற்றிருக்கும் வெற்றியை கடுமையாக விமரிசித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், பாஜக பெற்றிருக்கும் இந்த வெற்றியானது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் பெற்ற வெற்றியே. உங்களை நீங்கள் நம்பினால், வாக்குச் சீட்டுகளை வைத்து தேர்தல் நடத்தி வெற்றிபெற்றுக் காண்பியுங்கள் என்று சவால் விடுத்துள்ளார்.
இடைத் தேர்தல்களில் தோல்வி அடைந்த பாஜக, சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதையும் உத்தவ் தாக்கரே சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல்கள் வரும் போகும், இன்று நீங்கள் வெற்றி பெற்றால், நாளை நீங்கள் தோல்வி அடையலாம், ஆனால், தொடர்ந்து கடுமையாக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.