ஆளுநரைச் சந்திக்க கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவுக்கு அனுமதி மறுப்பு 

கர்நாடகாவில் ஆட்சியமைப்பது தொடர்பாக ஆளுநரைச் சந்திக்க முயன்ற கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா தலைமையிலான குழுவுக்கு, ஆளுநர் அனுமதி மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆளுநரைச் சந்திக்க கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவுக்கு அனுமதி மறுப்பு 
Published on
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடகாவில் ஆட்சியமைப்பது தொடர்பாக ஆளுநரைச் சந்திக்க முயன்ற கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா தலைமையிலான குழுவுக்கு, ஆளுநர் அனுமதி மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 12- ஆம் தேதி  நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் செவ்வாயன்று வெளியாகின. இதில் அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தாலும்,  ஆட்சியமைக்கும் அளவுக்கு பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, மதசார்பற்ற ஜனதா தள கட்சி ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதன் மூலம் தேவேகௌடாவின் மகன் குமாரசாமி கர்நாடக முதல்வராகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

ஆட்சி அமைப்பது தொடர்பாக மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவேகௌடாவுடன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கூட்டணி ஆட்சிக்கு தேவேகௌடாவும் ஒப்புக் கொண்டுள்ளார்.

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்தத் தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வரா, கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம் என்று கூறினார். மேலும், கர்நாடகாவில் காங்கிரஸின் ஆதரவோடு ஆட்சியமைக்க மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவேகௌடா ஒப்புக் கொண்டிருப்பதாகவும், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இதே செய்தியாளர்கள் சந்திப்பில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடக மாநில மக்களின் தீர்ப்பை மதிக்கிறோம். மேலும், மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க ஆதரவு அளிக்கிறோம் என்றும் கூறினார்.

இந்நிலையில் கர்நாடகாவில் ஆட்சியமைப்பது தொடர்பாக ஆளுநரைச் சந்திக்க முயன்ற கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா தலைமையிலான குழுவுக்கு, ஆளுநர் அனுமதி மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சி எடுத்த முடிவின் படி ஆளுநரைச் சந்திக்க ஆளுநர் மாளிகைக்குச் சென்ற காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா தலைமையிலான குழுவினர், ஆளுநர் சந்திக்க மறுத்ததன் காரணமாக ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com