நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கர்நாடகாவில் மறுதேர்தல் நடத்த வேண்டும்: அமித்ஷா அதிரடி 

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் கர்நாடகாவில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துளார்.

News image
Updated On :21 மே 2018, 4:43 pm IST

புதுதில்லி: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் கர்நாடகாவில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா கட்சியின் தலைமை அலுவலகத்தில் திங்களன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுதுஅவர் கூறியதாவது:

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. காங்கிரசும் மத்சசார்பற்ற ஜனதா தளமும் ஒன்றையொன்று எதிர்த்து கடுமையாக தேர்தல் களத்தில் நின்றன. ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பொருந்தாத சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளனர்.

தேர்தல் சமயத்தில் எல்லா விதமான தேர்தல் விதிமீறல்களிலும் காங்கிரஸ் ஈடுபட்டது. ஜாதி மத விஷயங்களை பயன்படுத்தி வெற்றி பெற முயற்ச்சித்தது.

ஆனால் ஊழல் முத்திரை பதிந்துள்ள காங்கிரஸ் வெற்றி பெறுவதை மக்கள் விரும்பவில்லை. அதே போல காங்கிரஸ் - மஜத கூட்டணியையும் மக்கள் புறக்கணிப்பர்.    

தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள பாஜகவுக்கே ஆட்சியமைக்க எல்லா உரிமையும் உள்ளது. காங்கிரஸ் ஏன் தோல்வியை கொண்டாடி வருகிறது என்று தெரியவில்லை.

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் கர்நாடகாவில் மறுதேர்தல் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.