பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இதுதொடர்பாக, மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
முதலாவதாக, மேற்கு வங்கத்துக்குச் செல்லும் அவர், கொல்கத்தாவின் சாந்தி நிகேதனில் உள்ள விசுவ பாரதி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். அந்த விழாவில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் கலந்து கொள்கிறார்.
அதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள வங்கதேச பவனை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். இந்தியா-வங்கதேசம் இடையேயான கலாசார உறவுகளின் அடையாளமாக அந்த அந்த கட்டடம் விளங்கும்.
மாலையில், ஜார்க்கண்ட் மாநிலத்துக்குச் செல்லும் மோடி, சிந்திரி நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் தொடங்கப்படும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
ஹிந்துஸ்தான் உரம் மற்றும் ரசாயன நிறுவனம் சார்பில் தொடங்கப்படும் சிந்திரி உரம் தயாரிப்புத் திட்டம், கெயில் நிறுவனத்தின் ராஞ்சி நகர எரிவாயு விநியோகத் திட்டம், தேவ்கர் நகரில் எய்ம்ஸ் மருத்துவமனை, தேவ்கர் விமான நிலைய மேம்பாடு, அனல்மின் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் அவற்றில் அடங்கும்.
அதைத் தொடர்ந்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் திட்டங்களை விரைவாகவும், சிறப்பாகவும் செயல்படுத்தி வரும் மாவட்ட ஆட்சியர்களுடன் மோடி கலந்துரையாடுகிறார் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கில் ஊடகர் கைது: காவல் துறை விளக்கம்!
விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம்! இந்திய அணி 233 ரன்களுக்கு ஆல்-அவுட்!

அமெரிக்காவுக்குப் பதிலடியான வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்! சௌதி அரேபியா கண்டனம்!

அன்பே டயானா படக்குழுவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு!
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



