சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

இலவச சமையல் எரிவாயு இணைப்பு திட்ட பயனாளிகளுடன் மோடி உரையாடல்

இலவச சமையல் எரிவாயு திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 10 கோடி வீடுகளுக்கு சமையல் எரிவாயு இணைக்கப்பட்டுள்ளது என்று மோடி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:09 pm

DIN

மே 1, 2016-ஆம் ஆண்டு உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தை பிரதமர் மோடி உத்தர பிரதேசத்தில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் நோக்கமானது குழந்தைகள் மற்றும் பெண்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக தொடங்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்களிடம் பிரதமர் மோடி தனது பிரத்யேக ஆப் மூலம் இன்று (திங்கள்கிழமை) உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது, 

"இலவச சமையல் எரிவாயு இணைப்பு திட்டம் இந்தியாவில் பல்வேறு மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டம் இந்திய பெண்களின் சிறந்த ஆரோக்கியத்தை நோக்கி செல்கிறது. ஏழை, விளிம்பு நிலை, தலித் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வியலை இந்த திட்டம் பலப்படுத்தியுள்ளது. 

2014-ஆம் ஆண்டு வரை 13 கோடி மக்கள் தான் எரிவாயுவை இணைத்திருந்தனர். அதில், பெரும்பாலானோர் பணக்காரர்கள். கடந்த 4 ஆண்டுகளில் 10 கோடி புதிய இணைப்புகள் ஏழைகளின் பயனுக்காக இணைக்கப்பட்டுள்ளது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.