புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

புதிதாக நியமிக்கப்பட்ட 4 நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவியேற்பு

புதிதாக நியமிக்கப்பட்ட 4 நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

News image
Updated On :2 நவம்பர் 2018, 6:35 am

IANS

புது தில்லி: புதிதாக நியமிக்கப்பட்ட 4 நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, ஆர். சுபாஷ் ரெட்டி, முகேஷ் குமார் ரசிக்பாய் ஷாஹ், அஜய் ரஸ்தோகி ஆகியோர் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

இவர்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இவர்களது பதவியேற்பின் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் பணியாற்ற வேண்டிய மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 31 ஆக இருக்கும் நிலையில் 3 நீதிபதிகள் பற்றாக்குறையாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.