குஜராத் தலைமைச் செயலகத்தில் சிறுத்தை நுழைந்த விடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், காந்திநகரில் அம்மாநில தலைமைச்செயலகம் அமைந்துள்ளது. இங்கு இன்று அதிகாலை 2 மணியளவில் சிறுத்தை ஒன்று புகுந்தது. இது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அதில் சிறுத்தை தலைமைச் செயலகத்தின் முன்பக்க உள்ள இரும்புக் கதவின் கீழ்பகுதி வழியாக உள்ளே நுழைகிறது. இதையடுத்து அங்கு 100க்கும் மேற்பட்ட காவலர்கள் தடுப்பு வேலிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பாக கூண்டு வரவழைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் யாரும் தலைமைச் செயலகத்திற்குள் இன்று அனுமதிக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









