அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகர அரசு ஊழியர்களுக்கு அவர்களது வங்கி சம்பள கணக்கில் இரு மடங்காக சம்பளம் போடப்பட்டுள்ளது. இதனை அரசு தீபாவளி பரிசாக வழங்கி இருக்கலாம் என நினைத்து பல அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் அவர்களது வங்கி கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அக்டோபர் மாதம் சம்பளமாக இரு மடங்கு சம்பளம் தங்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதை கண்டு அரசு ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். தீபாவளி பண்டிகைக்காக கூடுதலாக ஒரு மாத சம்பளம் வழங்கியுள்ளனர் என பல ஊழியர்கள் மகிழ்ந்தனர்.
ஆனால், வங்கியில் ஏற்பட்ட எந்திர கோளாறு காரணமாக கூடுதலாக ஒரு மாத சம்பளம் செலுத்தப்பட்டது என விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில், அனைத்து அரசு அலுவலகங்களின் தலைவர்களுக்கும் மாவட்ட அரசு கருவூல அதிகாரி ஏ.கே.மைனி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், அரசு கருவூலத் துறையின் மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தவறுதலாக இரு மடங்காக சம்பளம் வழங்கப்பட்டுவிட்டன, விரைவில் அரசு கருவூலம் மூலமாக ஒரு சம்பளம் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படும். கூடுதலாக செலுத்தப்பட்ட தொகையை எடுக்க வேண்டாம் எனவும், குறிப்பாக கல்வித்துறை சார்ந்தவர்கள் இரட்டிப்பு சம்பள தொகையை (2வது சம்பளம்) எடுக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமிர்தசரஸ் மாவட்டத்தில் மட்டும் அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக ஒருமாத சம்பளமாக ரூ.40 முதல் 50 கோடி வரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே என அரசு ஊழியர்கள் புலம்பியபடி தங்களது வேலையை தொடர்ந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவல்துறையினரின் தீர்க்கப்படாத குறைகளை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! - அன்புமணி வலியுறுத்தல்

இ20 பெட்ரோல் விவகாரம்: பிரதமர் இல்லத்தை நோக்கி கேஜரிவால் நாளை பேரணி!
நிறைய மக்களுக்கு செய்யுங்கள் என ரஜினி வாழ்த்தினார்! அமைச்சர் வன்னி அரசு

மதுரை மீனாட்சி ஆசீர்வாதத்துடன்.. த்ரிஷாவின் அரசியல் போஸ்டர்களால் பரபரப்பு!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



