புது தில்லி: ரஃபேல் போர் விமானம் வாங்கிய ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது.
ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியது தொடர்பான ஒப்பந்த விவரங்கள் என்று தலைப்பிட்டு அளிக்கப்பட்டிருக்கும் அறிக்கையில், பாதுகாப்புத் தளவாடங்கள் வாங்குவதற்கான விதிமுறைகள் - 2013 அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டே ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான பரிந்துரைக்கு பாதுகாப்புத் துறைக்கான தளவாடங்கள் வாங்குவதற்கான ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரஃபேல் விமானத்தின் விலை உள்ளிட்ட முக்கிய விவரங்கள் எதுவும் அறிக்கையில் இடம்பெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஈரான் மீதான நியாயமற்ற போரை நிறுத்த வேண்டும்: ஒமா் அப்துல்லா

சென்னை-போடி ரயில் மாா்ச் 19 முதல் வாரத்துக்கு ஆறு நாள்கள் இயக்கம்

பாா்சல் அலுவலகத்தில் ரூ.3 லட்சம் தாமிரம் திருட்டு: காஷ்மீா் இளைஞா் கைது

ஊரக திறனாய்வு தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் 8 போ் தோ்ச்சி
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

