ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் மற்றும் அவரது குழுவுக்கு முதுகெலும்பு உள்ளது என்று எண்ணுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஆர்பிஐ மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான பிரச்னை நிலவி வரும் நிலையில், ஆர்பிஐ வாரியக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதுதொடர்பாக டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,
"மோடி மற்றும் அவரது சேவகர்கள் குழு அனைத்து அமைப்புகளையும் அழித்து வருகிறது. இன்று, மோடி தனது கைப்பாவைகள் மூலம், ஆர்பிஐ வாரியக் கூட்டத்தில் ஆர்பிஐயை அழிக்க முயற்சிப்பார். உர்ஜித் படல் மற்றும் அவரது குழுவுக்கு முதுகெலும்பு உள்ளது என்று நினைக்கிறேன். அவர்கள் மோடிக்கான எல்லையை அவருக்கு காண்பிப்பார்கள் என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அறிவிக்கப்படாத மின் கட்டண உயர்வா? இபிஎஸ் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார்!

கடந்த 5 நிதியாண்டுகளில் 6,255 கிளைகளை திறந்த பொதுத்துறை வங்கிகள்!

RSS கொள்கையில் அமைச்சர் நிர்மல் குமார்! திமுக MLA பேச்சுக்கு கொந்தளித்த அமைச்சர்கள்!
இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 11 - நேரலை!
விடியோக்கள்

செலவுகளை ஏன் நீங்கள் குறைக்கவில்லை? பேரவையில் எடப்பாடி பழனிசாமி! | Full Speech



