சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

17 நிமிடங்களில் பாபர் மசூதியை  இடித்தோம்; ராமர் கோவிலுக்கு சட்டம் இயற்ற எவ்வளவு காலம் வேண்டும்?: சிவசேனா கேள்வி 

நாங்கள்  17 நிமிடங்களில் பாபர் மசூதியை  இடித்தோம்; ஆனால் ராமர் கோவிலுக்கு சட்டம் இயற்ற இன்னும் எவ்வளவு காலம் வேண்டும்? என்று மத்திய அரசுக்கு சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:42 pm

DIN

மும்பை: நாங்கள்  17 நிமிடங்களில் பாபர் மசூதியை  இடித்தோம்; ஆனால் ராமர் கோவிலுக்கு சட்டம் இயற்ற இன்னும் எவ்வளவு காலம் வேண்டும்? என்று மத்திய அரசுக்கு சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. 

சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி-பாபர் மசூதி விவகாரம் தொடர்பாக நீண்ட காலமாக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தற்போது இந்த வழக்கானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் ராமர் கோவிலை கட்ட விரைவில் அவசரச்சட்டம் இயற்றபட வேண்டும் என்ற கோரிக்கையும் இந்து அமைப்புக்கள் தரப்பில் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.  சிவசேனாவும் தொடந்து இந்த கருத்தை வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் நாங்கள்  17 நிமிடங்களில் பாபர் மசூதியை  இடித்தோம்; ஆனால் ராமர் கோவிலுக்கு சட்டம் இயற்ற இன்னும் எவ்வளவு காலம் வேண்டும்? என்று மத்திய அரசுக்கு சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. 

இதுதொடர்பாக சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் மும்பையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

நாங்கள் பாபர் மசூதியை வெறும் 17 நிமிடங்களில் தரைமட்டமாக்கி விட்டோம். ஆனால் ராமர் கோவிலைக் கட்டுவதற்கு சட்டம் இயற்ற இன்னும் எவ்வளவு காலம் வேண்டும்? கோவில் கட்ட எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இந்த தேசத்தில் சுதந்திரமாகச் சுற்ற முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

இவ்வாறாக ராமர் கோவில் விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் தொடர்ந்து அழுத்தங்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.