இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

கர்நாடகா: மாண்டியாவில் கால்வாயில் பேருந்து கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு

கர்நாடகாவில் விஸ்வேஷ்வரய்யா கால்வாயில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

News image
Updated On :24 நவம்பர் 2018, 9:36 am

PTI


கர்நாடகாவில் விஸ்வேஷ்வரய்யா கால்வாயில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம், மாண்டியாவில் இருந்து தனியார் பேருந்து ஒன்று இன்று காலை பாண்டவபுரம் புறப்பட்டுச் சென்றது. இந்தப் போருந்து பாண்டவபுரம் தாலுகா கனகநமராடி அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்து முற்றிலும் நீரில் மூழ்கியது. இந்தப் பேருந்தில் அரைநாள் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பள்ளிச் சிறார்கள் அதிகளவில் இருந்தனர். விபத்தில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 25 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.