குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பாலியல் துன்புறுத்தல் குறித்து காலவரம்பின்றி புகார் அளிக்க அனுமதி: சட்ட அமைச்சகத்துக்கு மேனகா காந்தி கடிதம்

#MeToo ஹேஷ்டேக்கின் தாக்கமாக, பாலியல் துன்புறுத்தல் குறித்து காலவரம்பின்றி புகார் தெரிவிக்க அனுமதி வழங்க மேனகா காந்தி இன்று (திங்கள்கிழமை) சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

News image
Updated On :8 அக்டோபர் 2018, 6:45 pm IST

#MeToo ஹேஷ்டேக்கின் தாக்கமாக, பாலியல் துன்புறுத்தல் குறித்து காலவரம்பின்றி புகார் தெரிவிக்க அனுமதி வழங்க மேனகா காந்தி இன்று (திங்கள்கிழமை) சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சிறுவயதில் பாலியல் அச்சுறுத்தல் மற்றும் பாதிப்புக்குள்ளான பெண்கள் #MeToo ஹேஷ்டேக் பிரசாரம் மூலம் சமூக வலைதளங்களில் தாங்கள் எதிர்கொண்ட துன்புறுத்தல்களை பகிர்ந்துகொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி பாலியல் குற்றங்கள் குறித்து புகார் தெரிவிப்பதற்கான காலவரம்பை நீக்குமாறு சட்ட அமைச்சகத்தை கேட்டுக்கொண்டார். இதுதொடர்பாக, அவர் கூறுகையில், 

"பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் யார் என்று எப்போதும் நினைவில் இருக்கும். எந்த காலவரம்பு இல்லாமல் புகார் தெரிவிக்க அனுமதி வழங்குமாறு சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம். எவ்வளவு தாமதம் ஆனாலும் அது பிரச்னை இல்லை. 10-15 ஆண்டுகளுக்குப் பிறகு கூட புகார் அளிக்கும் வகையில் பரிந்துரை செய்துள்ளேன்" என்றார்.    

இந்திய தண்டனையியல் சட்டம் 468-ன்படி சிறார் வன்கொடுமை உட்பட எந்த குற்றமாக இருந்தாலும் சம்பவம் நடந்து 3 ஆண்டுகளுக்குள் புகார் தெரிவிக்க வேண்டும். அப்படி 3 ஆண்டுகளுக்கு முன் புகார் தெரிவிக்கும் பட்சத்தில் சம்மந்தப்பட்டவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.    

நீதிக்காக புகார் அளித்தாலோ, அல்லது கால தாமதத்துக்கான காரணத்தை சரியாக விளக்கினாலோ, வழக்கின் தன்மை உணர்ந்து அந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும். 

சிறார் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவர்கள் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்கையில் தான் நிறைய பிரச்னைகளை சந்திக்க நேரிடும். அவர்கள் 18 வயது அல்லது அதற்கு மேலாக இருந்தால் தான் புகார் அளிக்க முடியும்.  

அதனால், மேனகா காந்தியின் இந்த பரிந்துரையை சட்ட அமைச்சகம் ஏற்றுக்கொண்டால் இது பிரச்னைகள் தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.