ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

முதல்வர் படம் மீது சிறுநீர் கழித்த அமைச்சர்: இது ராஜஸ்தான் கூத்து 

ராஜஸ்தான் மாநில முதல்வரான வசுந்தரா ராஜே சிந்தியா படம் மீது மாநில அமைச்சர் ஒருவர் திறந்தவெளியில் சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் சர்ச்சைக்குளாகி இருக்கிறது. 

News image
Updated On :8 அக்டோபர் 2018, 8:37 pm IST

அஜ்மீர்: ராஜஸ்தான் மாநில முதல்வரான வசுந்தரா ராஜே சிந்தியா படம் மீது மாநில அமைச்சர் ஒருவர் திறந்தவெளியில் சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் சர்ச்சைக்குளாகி இருக்கிறது. 

பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வராக வசுந்தரா ராஜே சிந்தியா உள்ளார். இவரது அமைச்சரவையில் ஷம்பு சிங் கேதாசர் என்பவர் இடம்பெற்றிருக்கிறார். இவர் ராஜஸ்தான் மாநில விதைகள் கழகத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

ஞாயிறன்று  அஜ்மீரில் பாஜக பேரணி ஒன்று நடந்தது. பேரணி நடந்த பகுதிக்கு பின்புறம் சென்ற அமைச்சர் ஷம்பு சிங் கேதாசர், அங்கு கிடந்த முதல்வர் வசுந்தரா ராஜேவின் பதாகை மீது சிறுநீர் கழித்துள்ளார். இதைச் சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விட்டனர். 

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் 27 மாவட்டங்களில் திறந்த வெளிக்கழிப்பிடம் ஒழிக்கப்பட்ட பகுதியாக ஸ்வச் பாரத் திட்டத்தில்  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் ஒருவரே இத்தகைய செயலில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து அமைச்சர் ஷம்பு சிங்கிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:

திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பது என்பது நமது பழங்காலப் பழக்கம். நான் முதல்வர் பதாகை மீது சிறுநீர் கழிக்கவில்லை, சிறிது தொலைவு தள்ளித்தான் சிறுநீர் கழித்தேன். அந்தப் பகுதியில் சிறுநீர் கழிப்பதற்கான இடம் ஏதும் இல்லை. அதன் காரணமாகவே திறந்தவெளியில் சிறுநீர் கழிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

இயற்கை உபாதையை என்ன செய்ய முடியும். மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் அவ்வாறு செய்தால் சுகாதாரக்கேடு உருவாகும்.

இவ்வாறு அமைச்சர் ஷம்பு சிங் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.